திங்கள், 10 ஜனவரி, 2011

  • கற்றதும் பெற்றதும் நாம் பெற்ற இன்பம்... பிறரோடு பகிர்ந்துகொள்வது அளவிலா இன்பம் நன்றி

பிரமிடுகள் -அற்புத படங்கள் அதிசய தகவல்கள் !!!!


தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை .

உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விழயங்களை உள்ளடக்கியது


ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் ,இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்ட க்ரநிடே சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .பின்னர் இக்கற்கள் (வெளிப்புற) பின்னர் வந்த அரப் சுல்தானால் பெயர்த்தெடுக்கப்பட்டு ,மசூதிகள் கட்ட கொண்டு செல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன் என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.


புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று அய்ய்வலர்கள் கருத்து .
இத்தகைய புற கற்களை அராபிய கொள்ளையர்கள் கொள்ளயடிதத்தின் விளைய்வாக அதனுடைய விழயங்கள் உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டன.

கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதொகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுலத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மற்றுமொரு அதிசய விழயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கேட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு உள்ளது .ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பெருந்தினியாக உள்ளது !

இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குஉருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.
இரண்டாயிரத்தி நான்காம்
ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோட்களை உள் செலுத்தி உலகம் முழும் முழுதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.
உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்கு பின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக
மனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.
By-Rizana (Searching Information)
பிரபல தெலுங்கு இயக்குனர் கே. விஸ்வநாத். இவர் எடுத்த “சங்கராபரணம்” படம் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடியது. விருதுகளையும் குவித்தது. 


இசைப் புயலுக்கு 45 வயது

  
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 45 வயது-ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வெல்வாரா? இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 45வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினர். கடந்த 2009ம் ஆண்டு அடுத்தடுத்து கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளியது போல இந்த ஆண்டும் அவர் தனது 127 ஹவர்ஸ் படத்துக்காக இந்த விருதுகளை மீண்டும் பெறுவார் என்ற நம்பிக்கையுடன் ரஹ்மான் ரசிகர்கள் உள்ளனர்.

உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் !!!

 wood-car.jpg

அமெரிக்காவிலுள்ள வாகன வடிவமைப்பு நிறுவனம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக மரத்தாலான ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது.
இந்த வண்டியில் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். பாதுகாப்பும் அதிகம் என்கின்றனர் வடிவமைத்தவர்கள்.

1134 கிலோகிராம் எடையுள்ள இந்த கார், பொதுவான கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எடை குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு காலன் பெட்ரோலில் 36 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என்கிறார் இதை வடிவமைத்த ஜோ கார்மன்.

இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படாத இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு அப்படின்னா மாட்டுவண்டி, தள்ளுவண்டி எல்லாம் மரத்தினால செய்தது இல்லையா என கோயம்புத்தூர் குசும்புடன் விதண்டாவாதம் பண்ணக்கூடாது.. சரியா ?

திங்கள், 3 ஜனவரி, 2011

திருமணத்திற்கு பின் ஆண்களின் குணநலன்களில் மாறுதல்



திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.